சனி, 14 மே, 2016

அன்பான அடக்குமுறை

தெண்ட கருமாந்திரம், முட்டா பயல்கள், வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால் கையில் குஷ்டம் வரும், பெண்களை கற்பழிப்பேன், கஞ்சா வைத்து கைது செய்வேன், ஒரு தலைவரை ஆதரித்ததற்கு அவரின் வீட்டின் முன்னாலேயே கொலை செய்வேன், இழிபிறவிகள், போடா லூசு, ஈன பிறவிகள், வல்லுறவு, மான பங்கம், ........, இன்னும் அச்சில் ஏற்ற முடியாத பல சொற்கள் பேசப்படும் ஒரு மேடை, தமிழகத்தின் மாற்று அரசியல் / எதிர்கால நம்பிக்கை என்று படித்த பலராலும் நம்பப்படுகிறது. அந்த தலைவர் வெளிட்டிருக்கும் "செயற்பாட்டு வரைவு திட்டம்(தேர்தல் அறிக்கை அல்ல என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள்) ". இதை சொல்லி பல இளைஞர்கள் அந்த கட்சியின் பின்னும் திரள தயாராக இருக்கிறார்கள். அந்த திட்டத்தை அவர்களே "அன்பான சர்வாதிகாரம் " என்கிறார்கள். மக்களாட்சியில் நம்பிக்கை இல்லாத தலைவர்களுக்கு தான் அடக்குமுறையில் நம்பிக்கை இருக்கும். அதனால் தானோ என்னவோ யூதர்கள் என்பதற்காக கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஹிட்லரை தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டு "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று நம் முன்னோர் கடைபிடித்த கொள்கையை கடைபிடிக்கிறேன் என்று சொல்வது சிந்திக்க மறுப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் சிந்திக்க தெரிந்தவர்கள்? சரி அதை விட்டுவிட்டு அவர்கள் எழுதிய விஜய் அவர்களை வைத்து இயக்குவதாக சிந்தித்திருந்த முதல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் (அது தான் செயற்பாட்டு வரைவு திட்டம்) எப்படி என்று பார்ப்போம்.

1.ஐந்து தலைநகரங்கள்: வரலாறு படித்தவர்களுக்கு முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்காலத்தில் தலைநகரை மாற்ற நடந்த கோமாளி தனங்களால் மக்களுக்கு ஏற்றப்பட்ட கடுமையான பாதிப்பு பற்றி தெரியும். அதேபோல் MGR என்ற புனிதர் நிகழ்த்த முயன்ற சமீபத்திய தலைநகர் மாற்றமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் அதை அவர் கைவிட்டதும் தெரியும். சரி வரலாறு தெரியாமல் நிகழ்காலம் மட்டுமே தெரிந்தால் கூட இந்த அறிவிப்பு எவ்வளவு கேலிக்கூத்து என்பது தெரியும். மொத்தம் 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பியன் பார்லிமென்ட் Brussels மற்றும் strasbourg என்ற இரண்டு இடங்களில் உள்ளது. வளர்ந்த 28 நாடுகளை கொண்ட ஐரோப்பியன் பார்லிமென்ட் இரண்டு தலைநகரங்களை சமாளிக்க முடியாமல் திணறும் போது  தமிழகத்தில் 5 தலை நகரங்கள் என்பது எவ்வளவு கேலிக்கூத்து?

2.மேம்பாலங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். இதற்கு நான் விமர்சனம் செய்ய தேவை இல்லை. உங்களுக்கே தெரியும் 

3. இயற்கை வேளாண்மை மட்டும் அனுமதிக்கப்படும். பசுமை புரட்சிக்கு முன்னர் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மட்டுமே இந்தியாவில் செயல்படுத்தி வந்தார்கள். அப்பொழுது மக்கள் தொகையும் குறைவு, 90% வேளாண்மை மட்டுமே செய்து வந்தார்கள். அப்படி இருந்தும் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடியது. அவுன்ஸ் அரிசிக்காலம் என்றால் என்ன என்று உங்கள் வீடு பெரியவர்களை கேளுங்கள் உண்மை விளங்கும். இயற்கை வேளாண்மை என்பது வரவேற்க தக்கது ஆனால் மற்ற வேளாண்மை முறையை தடை செய்வது மிகப்பெரும் அழிவுக்கு இட்டுசெல்லும். அதனால் தான் திமுக வும் கூடதனது தேர்தல் அறிக்கையில் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளது 

4. ஐயா வீரப்பனாருக்கு நினைவகம் கட்டப்படும் . இதற்கு நான் எதாவது விளக்கம் சொல்ல வேண்டுமா என்ன?

5. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் விற்க படும். உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கேட்டுப்பாருங்கள்,கல் குடித்தால் அவர்கள் குடிகாரர்கள் இல்லையா அவர்கள் குடிபோதையில் ஏதும் தவறு செய்ய மாட்டார்களா என்று?

இதே போல் பல பொய்யான வாக்குறுதிகளை போகிற போக்கில் அள்ளித்தெளித்த ஆவணம் தான் அது. இந்த வாக்குறுதிகளை படித்த இளைஞர்கள் பலரும் நம்புவதுதான் அதைவிட சோகம்.

இன்னும் பல பொய்கள். உதாரணதிற்கு சில 
1. மெக்கலே கல்வி திட்டம் ஒழிக்கப்படும். அது ஏற்கனவே ஒழிக்கப்பட்டு சமச்சீர்கல்வி மூலம் செயல்பட்டு அடிப்படை கல்வி நடைமுறைப்படுத்தபடுகிறது 

2. கல்வியும், மருத்துவமும் இலவசம். கல்வி ஏற்கனவே இலவசமாகத்தான் உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும் அல்ல அனைத்து தனியார் பள்ளிகளிலும் RTE (கல்விக்கான உரிமை சட்டம் ) 25%  இடங்கள் ஒதுக்கபடுகிறது. மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் கல்விக்கு என்று இரண்டு பேராசிரியர்கள் (உயர்கல்வி, பள்ளி கல்வி )அமைச்சர்கள் பணி ஆற்றினார்கள். அதே போல் முதல்தலைமுறை பட்டதாரிகள் படிக்கும் எந்த படிப்பிற்கும் (பொறியியல், மருத்துவம்) எந்த கல்லூரி ஆயினும் அரசே அவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொண்டுள்ளது. அதே போல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் இலவச மருத்துவம் அளிக்கபடுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமான மருத்துவம் அளிக்க படுகிறது 

3. பண்ணை முறையில் விவசாயம் செய்யப்படும். அதாவது அரை ஏக்கர் ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயியிடம் இருந்து பிடுங்கி 2000, 3000 ஏக்கரில் பழ பண்ணைகள் அமைக்கப்படும். அந்த ஏழை விவசாயி தனக்கு தேவையான காய்கறிகளை கடைகளில் தான் வாங்கிக்கொள்ள முடியும். தன் நிலத்தில் தான் நினைத்ததை விளைவிக்க முடியாமல் அரசாங்கம் பிடுங்கி கொள்வதுதான் அன்பான சர்வாதிகாரமாம். இந்த பண்ணை முறை விவசாயம் என்பது பெருமுதலாளிகள் பயன்படுத்தும் யுக்தி. அதை தான் முன்னிருத்துகிறார்கள்.

சரி இவர்களின் வாக்குறுதிகள் தான் இப்படி, இவர்களின் செயல்பாடுகள்?
பொய்யை மட்டுமே பேசும் தலைவர். உதாரணம், 
MGR பதவி ஏற்பில் பெரியார் கலந்து கொண்டதாக  சொன்னது, 
ஏன் பெரியாரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போது பெரியாருக்கு பெரியாராக உள்ள அயோத்தி தாசரை போட்டுள்ளேன். பெரியார் என்பவர் திராவிடம் என்பதின் அடையாளமாக உள்ளார் அதனால் போட வில்லை என்பவர் திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் (பெரியாருக்கு முன்னர்) பயன்படுத்தியவர் அயோத்தி தாசர் என்பதை மறைப்பது 
கடவுள் மறுப்பை மேடை தோறும் முழங்கிவிட்டு இன்று முருகனுக்கு காவடி எடுப்பதும், கிறிஸ்துவ பேராயர் அவர்களிடம் நான் பேசியதை கருணாநிதியும் வீரமணியும் திரித்து விட்டார்கள் என்று மாற்றி பேசுவதும் தொடர்கதை ஆகிவிட்டது 
இந்தியாவிலயே தமிழ் நாட்டில் மட்டும் தான் பெயரை வைத்து யார் என்ன சாதி என்று சொல்ல இயலாது. அதனால் தான் தமிழர்களின் தனித்தன்மை போய்விட்டது . சாதியை பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டு சாதிய அரசியல் மீட்டெடுக்க பட வேண்டுமாம். ஏனென்றால் அப்பொழுது தான் யார் தமிழன் என்று கண்டு பிடிக்கமுடியுமாம். 
கல்விக்கொள்ளையர்களும், மணல் கொள்ளையர்களும் இடும் சல்லி காசுக்கு பெருந்தமிழர் என்று பாராட்டுரை வேறு. கனிம வளங்களை சுரண்டும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களே ஏன் என்றால், குடியரசுத்தலைவர் விருது கொடுத்துள்ளார்கள் அதனால் தான் என்கிறார்கள். அவர்கள் கொடுத்த அனுமதி என்பது அனுமதிக்கப்பட்ட அளவில் மணலை எடுக்க தான். ஆனால் கொள்ளை அடித்துவிட்டு வழக்கு வந்தாலும்  அவர்களை காசுக்காக ஆதரிக்கும் இவர்தான் சுற்றுச்சூழலை பாது காப்பாராம்

கத்தி பட சர்ச்சை வந்தபோது ராஜபக்சே வின் பினாமி நிறுவனம் லைக்கா என்று மற்ற தமிழ் அமைப்புகள் போராடிய போது லைக்கா நிறுவனத்திற்காக ஆதரவாக களம் இறங்கியவர் தான் நம் சீமான்.

தன் சொந்த திருமணத்தில் எத்தனை ஏமாற்று வேலை. ஈழத்தில் வாழும் கைம்பெண் ஒருவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு பின் காளிமுத்துவின் கயல்விழியை திருமணம் செய்தார். ஒருவேளை ஈழத்தில் எந்த கைம்பெண்ணும் இல்லையோ?

சரி இவரின் அரசியல் உறுதிதான் எப்படிப்பட்டது. காங்கிரசுக்கு ஆதரவு, திமுகவுக்கு ஆதரவு, மதிமுக வுக்கு ஆதரவு, சிவ சேனாவுக்கு ஆதரவு, அதிமுகவுக்கு ஆதரவு, இறுதியாக தனிக்கட்சி...

கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே அனைத்து தொகுதிகளிலும் போட்டிடும் வலிமை எப்படி கிடைத்தது. அது புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் யுரோ மற்றும் டாலர் களில் கிடைக்கிறது.  அந்த பணம் தான் 60 லட்ச ரூபாய் காராகவும் துப்பாக்கி ஏந்திய தனி பாதுகாப்பு படையாகவும் தமிழகத்தில் மறுஉருவம் பெறுகிறது. பக்கத்துக்கு மாநிலத்தில் முதல்வரை மிஸ்டர் உம்மன்சாண்டி என்று ஒரு சிறுமி அழைக்கிறார். இதுவரை ஒரு கவுன்சிலராக கூட பதவியில் இருந்திராத சீமானுக்கு 4 நபர்கள் கொண்ட துப்பாக்கி ஏந்திய தனி பாதுகாப்பு படை, 60 லட்ச ரூபாய் கார். இவர்கள் தாம் மாற்று அரசியலின் தன்னிகரில்லா தளபதிகள். தமிழ் தமிழ் என்று ஊர் ஊருக்கு பேசிவிட்டு தன் செயற்பாட்டு வரைவு திட்டத்தை கோயிலில் வைத்து சம்ஸ்கிருத அர்ச்சனை செய்த கொள்கையாளர்.

இறுதியாக ஒன்று, பொதுவாக தூய தமிழ் மேல் எனக்கு தனி காதலே உண்டு. மணிப்பிரவாள நடையில் இருந்த கொஞ்சும் தமிழில் மேடைப்பேச்சில் "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை மறவாது இடுவீர் எமக்கு இடுவீர் முத்திரை " மறுமலர்ச்சி அடைந்த தமிழ் இன்று சீமானின் மேடையில் ஆபாசமாக, வன்முறை தமிழாக காதில் கேட்பதற்கே நாராசமாய் விழுகிறது. தமிழ் என்றாலே இனிமை என்று தான் நினைத்திருந்தேன். அந்த தூய தமிழும் இவ்வளவு கேவலமாக பேச முடியும் என்ற ஒரு நிலைக்கு கொண்டு சேர்த்த பெருமைக்காரர் இவர்.

வாக்களிக்கும் முன் ஒன்று :  புலம்பெயர் தமிழர்கள் அளித்த வெளிநாட்டு பணம் செய்த செயல் என்ன தெரியுமா? போர் நிறுத்தத்தில் இருந்த இலங்கையில் விடுதலைப்புலிகள் மாவிலாறில் தண்ணீரை தடை செய்து போர்நிறுத்தத்தை முறிக்க செய்தது. அந்த பணம் செய்த வேலை இறுதியில் இன அழிப்பில் முடித்து வைத்தது. எனவே மீண்டும் ஒரு முறை  வெளிநாட்டு பணம் செய்யும் வேலையால் தாய் தமிழகத்திலும் இன அழிப்பை நிகழ்த்தி விடப்போகிறது.  இந்திய இறையாண்மை என்றால் என்ன என்று மேடைக்கு மேடை முஷ்டி உயர்த்தி இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டிவிட்ட சீமான் அதே தலைவன் கட்சி ஆரம்பிக்கும் போது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வராமல் கட்சி நடத்துவேன் என்று கட்சியை பதிந்த ஏமாற்றுக்காரர் அவர்களுக்கு உங்கள் ஆதரவை தரப்போகிறீர்களா? மாற்றம் வேண்டும் என்று 2011 ல் ஜெயாவுக்கும் 2014ல் மோடிக்கு வாக்களித்து இருமுறை ஏமாந்த நீங்கள் முன்றாம் முறையும் ஏமாளி ஆகப்போகிரீர்களா? அது மே 16 அன்று உங்கள் கையில் 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக